ஸ்ரீ:

ஸ்ரீ பூமிதேவி ஸமேத லவணவர்ஜித ஸ்ரீ வெங்கடேச பரப்ரஹ்மணே நம:
ஸ்ரீ ஸீதா ஸமேத பட்டாபிஷேக ராம பரப்ரஹ்மணே நம்:
ஸ்ரீ ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் ஸ்ரீபாத கைங்கர்ய ஸபா
நமது சம்பிரதாயத்தில் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதே தலையாய கடமையாக கருத வேண்டும். அதனால் தான் அனைவரும் திருக்கோயில் சென்று எம்பெருமானை தரிசனம் செய்கின்றார்கள்.
ஸ்ரீபாத கைங்கர்யம் செய்பவர்கள் எம்பெருமானை தனது தோள்களில் சுமந்து அனைவருக்கும் அவனது கடாஷத்தை பெற்று தருகின்றார்கள்.அதை போல் கோயில்களில் புஷ்ப கைங்கர்யம், திருமடப்பள்ளி கைங்கர்யம் , எம்பெருமானின் அலங்கார கைங்கர்யம் என்று பல கைங்கர்யத்தில் ஈடுபட்டு அனைவருக்கும் அவனது கடாஷத்தை பெற்று தருகின்றார்கள். இதை போல் கோயில்களில் தன்னலம் மற்ற கைங்கர்யம் செய்வதால் புனிதத்ன்மை அடைகிறது.
கோயில்களின் சுற்றுபுரத்தை நாம் துய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.கோயில்களை பராமரிப்பது நமது கடமையாகும்.